1950 தொடங்கி 1988 வரையிலான காலத்தில் 16 திரைப்படங்களுக்குக் கலைஞர் எழுதிய நாற்பது திரை இசைப்பாடல்களின் தொகுப்பு இது. எழுச்சித் தமிழ், நேசத் தமிழ், பாசத் தமிழ், நகைச்சுவைத் தமிழ் என்னும் பகுப்பில் இப்பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் படத்தின் பெயர், பாடல் எழுதப்பட்ட ஆண்டு, இசையமைப்பாளர் பெயர், பாடியோர் பெயர் ஆகியன குறிப்பிடப்பட்டுள்ளன.